sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27ல் துவக்கம்

/

 பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27ல் துவக்கம்

 பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27ல் துவக்கம்

 பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27ல் துவக்கம்


ADDED : டிச 07, 2025 01:53 AM

Google News

ADDED : டிச 07, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், 2026ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை, வரும் 27ல் துவக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் வனத்துறையால் ஆண்டுதோறும் ஜன., பிப்., மார்ச் மாதங்களில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நடப்பாண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு, கடந்த பிப்., மார்ச், ஏப்., மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பை, வரும் 27, 28ம் தேதிகளில், நீர்நிலைகளில் மேற்கொள்ள வனத்துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, பறவைகள் ஆர்வலர்கள் கூறியதாவது:

நடப்பு ஆண்டில், ஆசிய அளவில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி, தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, டிச., 27 முதல் பிப்., 28 வரை நடத்தப்படுகிறது.

பருவமழை முடிந்து, ஜன., மாதத்தில் தான் நீர்நிலைகளுக்கு பறவைகள் முழுமையாக வருகை தரும்.

ஆனால், அதற்கு முன்னதாக, டிசம்பர் மாதத்திலேயே, தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்துவதால், முழுமையான விபரங்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us