sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ., -- பா.ம.க., சந்தர்ப்பவாத கூட்டணி: முத்தரசன் சாடல்

/

பா.ஜ., -- பா.ம.க., சந்தர்ப்பவாத கூட்டணி: முத்தரசன் சாடல்

பா.ஜ., -- பா.ம.க., சந்தர்ப்பவாத கூட்டணி: முத்தரசன் சாடல்

பா.ஜ., -- பா.ம.க., சந்தர்ப்பவாத கூட்டணி: முத்தரசன் சாடல்


ADDED : மார் 21, 2024 01:35 AM

Google News

ADDED : மார் 21, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:''பா.ஜ., - பா.ம.க., கூட்டணி சந்தர்ப்பவாதமானது,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூ., மாநில பொது செயலாளர் முத்தரசன் சாடினார்.

அவர் கூறியதாவது:

பா.ஜ., கொடுத்த வாக்குறுதிகள் கடந்த பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மீண்டும் பிரசாரத்தில் மோடி உத்திரவாதம் என கூறுகிறார். இது மோடி உத்தரவாதம் இல்லை. உபத்திரவாதம். 2019 தேர்தலில் தி.மு.க., கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் நின்று போட்டியிட்டன. இன்று அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக சென்ற நிலையில் தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

தமிழிசை கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வருவது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போகிறது. அ.தி.மு.க., அத்தனை கதவுகளையும் திறந்து வைத்தும் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. பா.ஜ.,வை விட்டு அ.தி.மு.க., விலகினாலும் கடந்த ஆட்சியின் போது மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் தமிழர்கள் தான் என்று மத்திய அமைச்சர் ேஷாபா கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.






      Dinamalar
      Follow us