sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ., கூட்டணி புறக்கணிப்பு

/

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ., கூட்டணி புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ., கூட்டணி புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ., கூட்டணி புறக்கணிப்பு

69


UPDATED : ஜன 12, 2025 04:51 PM

ADDED : ஜன 12, 2025 04:10 PM

Google News

UPDATED : ஜன 12, 2025 04:51 PM ADDED : ஜன 12, 2025 04:10 PM

69


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., கூட்டணியும் புறக்கணிப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்.,5 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க., சார்பில் சந்திரகுமார் களமிறங்கி உள்ளார். இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.இந்நிலையில், இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜ., நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர் எதிரக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை , Disaster மாடல் என உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொது மக்களை பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், தி.மு.க.,வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தே.ஜ., கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்கள் அடைத்து வைக்க தி.மு.க.வை அனுமதிக்க தே.ஜ., கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தே.ஜ., கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் நன்கு ஆலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை அகற்றி மக்களுக்கான தே.ஜ., கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us