sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவியர் பாதுகாப்பில் அரசு அலட்சியம்: பா.ஜ., கோபம்

/

மாணவியர் பாதுகாப்பில் அரசு அலட்சியம்: பா.ஜ., கோபம்

மாணவியர் பாதுகாப்பில் அரசு அலட்சியம்: பா.ஜ., கோபம்

மாணவியர் பாதுகாப்பில் அரசு அலட்சியம்: பா.ஜ., கோபம்


ADDED : ஜூலை 20, 2025 06:15 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மாணவியர் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் உள்ள, 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 46 கல்லுாரிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்கும் 'உள்ளக புகார் குழு'க்கள் அமைக்கப்படவில்லை. அதிலும், தங்கள் கல்லுாரிகளில் உள்ளக புகார் குழு இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிவிக்க கூட, 113 அரசு கல்லுாரிகள் அலட்சியம் காட்டியுள்ளன.

அனைத்து நிறுவனங்களிலும், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு பெறும் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்று, விதி உள்ள போதும், அதை அமைக்காமல் இருப்பது, தி.மு.க., அரசுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. குற்றங்களே நடக்கவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லுாரிகளில் உள்ளக புகார் குழுக்களையே அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று, விளம்பரங்களில் முழங்குவது உண்மையானால், அனைத்து அரசு கல்லுாரிகளிலும் பாலியல் புகார் குழுக்களை, முதல்வர் ஸ்டாலின் அரசு உடனே அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us