தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த பிரதமருக்கு நன்றி; அண்ணாமலை
தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த பிரதமருக்கு நன்றி; அண்ணாமலை
ADDED : ஜூலை 27, 2025 03:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த பிரதமருக்கு நன்றி என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
கங்கை கொண்ட சோழபுரத்தில் கால் பதித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கட்டப்பட்ட 1000வது ஆண்டு விழா, தென் கிழக்கு ஆசியாவிற்குப் படையெடுத்துச் சென்ற 1000வது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்று “கடாரம் கொண்ட சோழன்” எனப் பெரும்புகழ் பெற்ற மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெருமையைப் பறைசாற்றி, நினைவு நாணயம் வெளியிட்டு, தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

