அ.தி.மு.க.,வுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் பா.ஜ.,
அ.தி.மு.க.,வுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் பா.ஜ.,
ADDED : நவ 20, 2024 07:44 PM
மணிப்பூரில் சட்டம் -- ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளது. ராணுவம் குவிக்கப்படும் அளவிற்கு, அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஆண்டு கணக்கில் அங்கு வன்முறை தொடர்ந்து நடந்து வரும் சூழலில், பிரதமராக இருக்கும் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் இருப்பது ஏன்? உடனே அங்கு சென்றால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும்.
அ.தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க, பா.ஜ., பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அ.தி.மு.க., முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும், பா.ஜ., முறியடித்து விடுகிறது. அ.தி.மு.க.,வை தனிமைப்படுத்தினால், வேறு வழியின்றி, பா.ஜ.,வுடன் கூட்டணி சேரும் என திட்டமிட்டு பா.ஜ., அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி சேரப் போகிறதா, இல்லை தனித்தே களம் காணப் போகிறதா என்பது அக்கட்சி முன்பாக இருக்கும் சவால்.
திருமாவளவன், தலைவர், வி.சி.,

