sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., -எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி

/

புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., -எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி

புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., -எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி

புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., -எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி

1


ADDED : டிச 22, 2024 02:04 AM

Google News

ADDED : டிச 22, 2024 02:04 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடுத்தடுத்து கவர்னரை சந்தித்ததால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி, ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையே புதுச்சேரியில் களம் இறங்கிய லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாக செயல்பட துவங்கினர்.

கூடவே, பஞ்சாலை தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டு, தொழிலாளர்கள் கோரிக்கைக்கு ஆதரவளித்தனர்.

இப்படி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது, கூட்டணியில் அங்கம் வகித்து, அரசை தலைமையேற்று நடத்தும் என்.ஆர்.காங்., தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமிக்கு, பா.ஜ., மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. தன்னுடைய அதிருப்தியை அவர் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சட்டசபை பா.ஜ., தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., ஆகியோர் கடந்த வாரம் டில்லி சென்று, கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, அரசுக்கு எதிராக நடக்கும் மூன்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதைஅடுத்து, அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் செல்வம் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அங்காளன் ஆகியோர் தனித் தனியாக சட்டசபை செயலரிடம் கடிதம் அளித்தனர்.

இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் நேற்று மதியம் திடீரென கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.

அப்போது, சபாநாயகர் செல்வம் கவர்னர் மாளிகை வந்தார்.

கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் கூறியதாவது:

நாங்கள் தனி அணியாக செயல்படவில்லை. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, எங்களது நிலைப்பாட்டை உரிய நேரத்தில் கூறுவோம்.

சபாநாயகர் செல்வத்திற்கு நெருக்கடி கொடுப்பதன் வாயிலாக, பா.ஜ., தலைமை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமால் இருக்க நாங்கள் முயற்சிப்பதாக கூறுவது தவறு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சபாநாயகருக்கு 'செக்'

பா.ஜ.,வில் இருந்து கொண்டு புதுச்சேரி அரசுக்கு எதிரான நிகழ்வுகளில் பங்கேற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை முடிவு செய்தது. இதை அறிந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 'எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், உங்கள் பதவியை காலி செய்து விடுவோம்' என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில், தினசரி ஒரு எம்.எல்.ஏ., வீதம் சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.அதன்படி கடந்த 19ம் தேதி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, 20ம் தேதி பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் கடிதம் கொடுத்தனர்.இந்த பிரச்னை பூதாகரமாவதற்கு முன், சரி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.








      Dinamalar
      Follow us