'பட்டியலின நிதியை வேறு திட்டத்துக்கு திருப்பக்கூடாது' பா.ஜ., ஆர்ப்பாட்ட முழக்கம்
'பட்டியலின நிதியை வேறு திட்டத்துக்கு திருப்பக்கூடாது' பா.ஜ., ஆர்ப்பாட்ட முழக்கம்
ADDED : பிப் 26, 2026 03:20 AM

சென்னை: ''மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, வெவ்வேறு தலைப்புகளில் செலவு செய்துவிட்டு, பணம் தரவில்லை என சொல்வது பித்தலாட்டம்,'' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி குற்றஞ்சாட்டினார்.
மத்திய அரசு பட்டியலின மக்களுக்கு ஒதுக்கும் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை, பிற திட்டங்களுக்கு, தமிழக அரசு பயன்படுத்துவதைக் கண்டித்து, தமிழக பா.ஜ., பட்டியல் அணி சார்பில், நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் துரைசாமி பேசும்போது, ''பட்டியலின மக்களுக்கு ஒதுக்கும் நிதியை எடுத்து, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
''தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கும் பணத்தை, வெவ்வேறு தலைப்புகளில் செலவு செய்துவிட்டு, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என கூறுவது பித்தலாட்டம். அதனால், தி.மு.க., அரசை துாக்கி எறிய வேண்டும்,'' என்றார்.

