sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிவகங்கை வாரச்சந்தையில் பா.ஜ., வர்த்தக பிரிவு செயலாளர் கொலை; 5 பேர் கைது

/

சிவகங்கை வாரச்சந்தையில் பா.ஜ., வர்த்தக பிரிவு செயலாளர் கொலை; 5 பேர் கைது

சிவகங்கை வாரச்சந்தையில் பா.ஜ., வர்த்தக பிரிவு செயலாளர் கொலை; 5 பேர் கைது

சிவகங்கை வாரச்சந்தையில் பா.ஜ., வர்த்தக பிரிவு செயலாளர் கொலை; 5 பேர் கைது


ADDED : ஆக 30, 2025 06:35 AM

Google News

ADDED : ஆக 30, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கையில் பா.ஜ., வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளரும், டூவீலர் மெக்கானிக்குமான சதீஷ்குமார் 49, கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை பா.ஜ., வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் 51. சிவகங்கை வாரச்சந்தைக்குள் உள்ள நகராட்சி கடையில் டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாளராக மணிபாரதி பணிபுரிந்தார்.

இவர்கள் இருவரும், கடைக்கு பின்னால் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இவர்களது அறைக்கு அருகில் உள்ள அறையில் டிரம்செட் வாசிக்கும் திருப்புத்துார் அருகே வடவன்பட்டி சேகர் மகன் செந்தமிழ்செல்வன் 19, திருப்புத்துார் குறிஞ்சிநகர் குணசேகரன் மகன் ஆனந்த் 19, மதுரை மாவட்டம், பட்டூர் மாயழகன் மகன் அன்பரசன் 25, கருப்பையா மகன் பூபதி என்ற வாண்டு 19, இவரது சகோதரர் கண்ணன் 20, ஆகியோர் தங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு டிரம்செட் வாசிக்கும் 5 பேர் மது அருந்தியுள்ளனர். அவர்களுடன் மணிபாரதியும் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கும், மணிபாரதிக்கும் தகராறு ஏற்பட்டது.

சதீஷ்குமார் விலக்கி விட சென்றார். அப்போது 5 பேரும் தள்ளிவிட்டதில் சதீஷ்குமார் 49, கீழே விழுந்து காயமடைந்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து செந்தமிழ்செல்வன், ஆனந்த், அன்பரசன், வாண்டு, கண்ணன் ஆகியோரை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us