ADDED : பிப் 12, 2024 11:13 PM
ஷோபா கரந்தலஜே அளித்த பேட்டி:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டு சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளது. பிரதமரின் எதிர்கால சிந்தனை நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வது தான். 2047 ல் முன்னேற்றம் அடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை கொண்டு வர பாடுபட்டு வருகிறார். 2024 லோக்சபா தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ., வெற்றி பெறும்.
இந்திய விவசாயிகள் உணவு பொருள் உற்பத்தியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறி, பழங்கள் 355, பருப்பு வகைகள் 324 மில்லியன் டன் வரை உற்பத்தி செய்துள்ளனர்.
நமது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கு தேவையான உணவு பொருளை உற்பத்தி செய்துள்ளனர்.
ஆண்டுக்கு 54 பில்லியன் டாலர் உணவு பொருள் ஏற்றுமதி ஆனது. அதில் நவதானியம் மட்டும் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. உலகளவில் ஏற்றுமதியில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. 2047 ல் முதலிடத்தை பிடிக்கும் என்றார்.