sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோபம்

/

ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோபம்

ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோபம்

ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோபம்


ADDED : ஏப் 04, 2025 12:42 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''மானிய கோரிக்கையில், எங்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வராவிட்டால், ஆதார், ரேஷன் கார்டுகளை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் ஒப்படைப்போம்,'' என, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் தமிழக பொதுச்செயலர் பாபு எழில் குணாளன் தெரிவித்தார்.

அவரது பேட்டி:

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில், புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்தோர் மற்றும் பட்டப்படிப்பு மற்றும் அரசு சான்றிதழ் படிப்புகளை நிறைவு செய்தோருக்கு, அரசு வேலை வேண்டி, கடந்த மாதம், 17ம் தேதி முதல் பத்து நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இருப்பினும், வேலை கிடைக்கவில்லை. துறை செயலருடன் நடந்த பேச்சுக்கு பின், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம். தற்போது, 'எழுதுபொருள், அச்சுத்துறையில், புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு வேலை இல்லை' என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, அரசு பல்கலை மற்றும் கல்லுாரிகளில் செயல்படும் பொது நுாலகம் மற்றும் ஆவணக் காப்பகங்களில் வேலை வழங்க வேண்டும். உதவித்தொகையை, 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

துறை சார்பில் வழங்கப்பட உள்ள, 'டெலி மெடிஷன்' பயிற்சிக்கு மாறாக, மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, தொழில் பயிற்சி வழங்க வேண்டும்.

அதேபோல், பஸ் நிலைய கழிப்பறை பராமரிப்புக்கான, 'டெண்டர்', வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, துறை செயலரிடம் தெரிவித்துள்ளோம்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின் போது, எங்களது கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் வராவிட்டால், அடுத்த கட்டமாக, ஆதார், ரேஷன் கார்டுகளை நலத்துறையிடமே ஒப்படைப்போம். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us