sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வன்னியர் ஒதுக்கீடு 24ல் பா.ம.க., போராட்டம்

/

வன்னியர் ஒதுக்கீடு 24ல் பா.ம.க., போராட்டம்

வன்னியர் ஒதுக்கீடு 24ல் பா.ம.க., போராட்டம்

வன்னியர் ஒதுக்கீடு 24ல் பா.ம.க., போராட்டம்


ADDED : டிச 11, 2024 07:16 PM

Google News

ADDED : டிச 11, 2024 07:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'வன்னியர் இடஒதுக்கீடு கோரி, வரும் 24ம் தேதி, பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, 24ம் தேதியுடன், 1,000 நாட்கள் ஆகின்றன. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதியின் அடிப்படை. இல்லாத காரணங்களை கூறி, ஓர் அரசு மறுக்கிறது என்றால், அந்த அரசை நடத்துபவர்கள், வன்னியர்கள் மீது எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, வரும் 24 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களிலும் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. காஞ்சிபுரத்தில் நடக்கும் போராட்டத்தில் அன்புமணி பங்கேற்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us