sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தனியாரிடம் மின் மீட்டர் வாங்க நுகர்வோருக்கு வாரியம் அனுமதி

/

தனியாரிடம் மின் மீட்டர் வாங்க நுகர்வோருக்கு வாரியம் அனுமதி

தனியாரிடம் மின் மீட்டர் வாங்க நுகர்வோருக்கு வாரியம் அனுமதி

தனியாரிடம் மின் மீட்டர் வாங்க நுகர்வோருக்கு வாரியம் அனுமதி


ADDED : பிப் 25, 2024 02:11 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் மீட்டர்களை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்க, நுகர்வோருக்கு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக மின் வாரியம் சார்பில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர் பொருத்தப்படுகிறது.

வீடுகளுக்கு, மீட்டர் வைப்பு தொகையாக, தரைக்கு அடியில் மின்சாரம் வழங்கும் இடங்களில் ஒரு முனை இணைப்புக்கு, 765 ரூபாய்; மும்முனைக்கு, 2,045 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

தாமதம்


இந்த தொகை கிராமங்களில் மாறுபடும். விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு மேல் தாமதம் செய்யப்படுகிறது.

இதற்கு, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் மீட்டருக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிகிறது.

எனவே, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்களை, நுகர்வோர்களே வாங்க அனுமதி அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் தொடர்பான விபரங்களை அலுவலகத்தில் விளம்பரப்படுத்துமாறு, பொறியாளர் களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சமீபத்தில், 8.50 லட்சம் ஒரு முனை மீட்டர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, 20 லட்சம் மீட்டர்கள் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

970 ரூபாய்


மீட்டருக்கு பற்றாக்குறை இருப்பதால், மின் இணைப்புக்கு விண்ணப்பிப்போர், தாங்களே தனியாரிடம் மீட்டர்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு முனை மீட்டர் விலை, 970 ரூபாய்; மும்முனை மீட்டர், 2,610 ரூபாய்; மீட்டரை வாங்கியதும், மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

அதை சோதித்து, மீட்டர் பொருத்தப்படும். அந்த நுகர்வோரிடம், மீட்டர் வைப்பு தொகை வசூலிக்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us