sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

/

 ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

 ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

 ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்


ADDED : மார் 23, 2026 10:17 PM

Google News

ADDED : மார் 23, 2026 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு, வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், மதியம் 1:15 மணிக்கு வெடிக்கும் என நேற்று அலுவலகத்திற்கு இ-மெயில் வந்தது.

இதையடுத்து, எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு தீனதயாளன் ஆகியோர் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலக கோப்பு அறைகள், வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு கிடைக்காததால், அது வெறும் வதந்தி என தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் மெயில் எங்கிருந்து வந்தது. அனுப்பியது யார் என்ற விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

தாமதமாக பார்க்கப்பட்ட மெயில் வெடிகுண்டு மதியம் 1:15 மணிக்கு வெடிக்கும் என மெயில் வந்துள்ளது. ஆனால், அந்த மெயிலை ஊழியர்கள் மதியம் 1:40 மணிக்கு பார்த்துவிட்டு, ஆர்.டி.ஓ.,விற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். இந்த மெயில் வதந்தி என்பதால், காலதாமதமாக பார்த்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுவே, உண்மையான மிரட்டலாக இருந்திருந்தால், ஊழியர்களின் அலட்சியத்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். சமீபத்தில் விழுப்புரம் கோர்ட் வளாகத்திற்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால், அனைத்து அரசு துறை அலுவலர்களும் தங்கள் அலுவலக மெயிலை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us