வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 17, 2024 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் விசாரணையில் புரளி என தெரிய வந்தது.
மதுரை மாவட்ட கண்ட்ரோல் ரூம்-க்கு ஒருவர் தொடர்பு கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் செல்போனில் தொடர்பு கொண்டவர் மதுரையை சேர்ந்த தமிழன்பன், மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இது புரளி என்றும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.