sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எல்லை குறித்த பயிற்சி அவசியம்; கடலோர காவல் படை ஐ.ஜி., பேட்டி

/

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எல்லை குறித்த பயிற்சி அவசியம்; கடலோர காவல் படை ஐ.ஜி., பேட்டி

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எல்லை குறித்த பயிற்சி அவசியம்; கடலோர காவல் படை ஐ.ஜி., பேட்டி

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எல்லை குறித்த பயிற்சி அவசியம்; கடலோர காவல் படை ஐ.ஜி., பேட்டி


ADDED : செப் 21, 2024 12:43 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி., டோனி மைக்கேல், நம் நாளிதழுக்கு, அளித்த பேட்டி:

தமிழகத்துக்கு இரண்டு கடல் எல்லைகள் உள்ளன. இலங்கை, மாலத்தீவுகளின் முக்கிய சந்திப்புகளில் அவை உள்ளன. அங்கு, இரு கண்காணிப்பு கப்பல்கள் எப்போதும் ரோந்து பணியில் இருக்கும். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து, படகில் 1 மணி நேரத்தில், இலங்கை கடல் எல்லைக்கு சென்று விடலாம்.

நாட்டின் கடல் எல்லை எங்கு முடிகிறது என்பதை தெரியாத மீனவர்கள், அந்நாட்டு கடற்படையிடம் பிடிபடுகின்றனர். எனவே, கடல் எல்லைகள் குறித்து, மீனவர்கள் அறிந்து கொள்வது அவசியம். கடலில், நம் கடலோர காவல் படை கப்பல் நிற்கும் எல்லையை தாண்டி செல்லக்கூடாது.

முன்பெல்லாம் ஆழ் கடலிலும் நீந்த தெரிந்த மீனவர்கள் இருந்தனர். இப்போது கடலுக்கு செல்பவர்களில் சிலருக்கு நீந்த கூட தெரியாத நிலை உள்ளது; இது கவலையளிக்கிறது. இதனால், சில இழப்புகள் ஏற்படுகின்றன. கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் சிலர், தங்கள் உதவிக்காக வடமாநில மீனவர்களை உடன் அழைத்துச் செல்கின்றனர். அவர்களில் பலருக்கு முறையான நீச்சல் தெரிவதில்லை. நீச்சல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என, அனைத்து மீனவர்களும், உயிர் காக்கும், 'லைப் ஜாக்கெட்' அணிய வேண்டும்.

மீனவர்களின் படகுகளில், ஏ.ஐ.எஸ்., என்ற தானியங்கி அடையாள அமைப்பு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், மீனவர்கள் எவ்வளவு துாரத்தில் செல்கின்றனர், எங்கு செல்கின்றனர் என்பதை கண்காணிக்க முடியும்.

நீண்ட தொலைவு செல்லும் படகுகளில், 'வாக்கி டாக்கி' இயங்காமல் போகலாம். அதற்காக, 'நாவிக்' செயற்கைக்கோள் வாயிலாக எச்சரிக்கை தரப்படுகிறது. ஆபத்து நடக்கும் பட்சத்தில் விரைந்து மீட்க இது உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக உதவுவதிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், கடலோர காவல் படை முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us