சிவகங்கையில் ஆடு திருட வந்ததாக கூறி சகோதரர்கள் அடித்துக்கொலை; கிராம மக்களிடம் போலீஸ் விசாரணை
சிவகங்கையில் ஆடு திருட வந்ததாக கூறி சகோதரர்கள் அடித்துக்கொலை; கிராம மக்களிடம் போலீஸ் விசாரணை
UPDATED : ஜூன் 03, 2025 09:53 AM
ADDED : ஜூன் 03, 2025 08:59 AM

சிவகங்கை: தோட்டத்தில் ஆடு திருட வந்ததாக கூறி சகோதரர்கள் இருவரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் சிவகங்கை நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது சகோதரர் விக்னேஸ்வரன். இவர்களில் மணிகண்டன் கோவை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு சகோதரர்கள் இருவரும் சிவகங்கை அருகே உள்ள திருமலை என்ற ஊரில் சுப்பு என்பவர் தோட்டத்துக்கு சென்றுள்ளனர்.
சம்பந்தம் இல்லாமல் இவர்கள் அங்கு வந்திருப்பதை கண்ட ஊர் மக்கள், ஆடு திருட வந்திருப்பதாக கூறி இருவரையும் சரமாரியாக தாக்கினர். சுயநினைவு இழந்த நிலையில் விழுந்த இருவரையும் அங்கே இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
இதில் இருவரும் சிகிச்சை பலன்றி இறந்துவிட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மதகுப்பட்டி போலீசார், தாக்குதல் நடத்திய கிராம மக்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.