மின்கம்பி மீது உரசிய பஸ்; மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாப பலி
மின்கம்பி மீது உரசிய பஸ்; மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாப பலி
ADDED : டிச 21, 2024 08:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே தனியார் பஸ், தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து அகல்யா (வயது 20) என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து மேல்மருவத்தூர் சக்தி கோவிலுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதி அருகே, பஸ், தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.
இதில், அகல்யா (வயது 20) என்ற இளம் பெண் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

