sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது: சிவசங்கர்

/

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது: சிவசங்கர்

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது: சிவசங்கர்

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது: சிவசங்கர்


ADDED : ஜூலை 23, 2025 03:12 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:

ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றக்கூடாது என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். அதனால், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.

'அ.தி.மு.க.,வை முழுதும் ஆக்கிரமித்து, அந்த இடத்தை நிரப்புவது பா.ஜ.,வின் கனவு' என்று, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தெளிவாக கூறியிருக்கிறார்.

தி.மு.க.,வின் ஓட்டுகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான், ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கட்சிகளை களத்தில் இறக்குவதை, பா.ஜ., வழக்கமாக கொண்டுள்ளது. இப்போதும் அந்த தந்திரத்தை பயன்படுத்துகின்றனர். ஆனாலும், அதை முறியடிப்போம்.

'வரும் 2036 வரை பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என்று சொன்னவர் தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. அப்படிப்பட்டவருக்கும் என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, அமித் ஷா முன் கைகட்டி வாய் பொத்தி அமர்ந்து, கூட்டணி அமைத்து விட்டார். ஆனால், வெளியில் வந்ததும் தைரியசாலி போல பேசத் துவங்கி விடுகிறார்.

இவ்வாறு சிவசங்கர் கூறினார்.






      Dinamalar
      Follow us