sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊதிய உயர்வு கேட்டு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

ஊதிய உயர்வு கேட்டு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கேட்டு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கேட்டு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 06, 2024 09:51 PM

Google News

ADDED : பிப் 06, 2024 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை, அரசு ஏற்க வேண்டும்; 15வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் சார்பில், மதுரை, நீலகிரி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, காரைக்குடி உள்ளிட்ட போக்குவரத்து மண்டல அலுவலகங்கள் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதுகுறித்து, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் கூறுகையில், ''சென்னையில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இன்று மதியம் நடக்கும் முத்தரப்பு பேச்சில், இனியும் தாமதிக்காமல், தொழிலாளர்களின் கோரிக்ககைளை நிறைவேற்ற, நிர்வாகம் முன்வர வேண்டும். இந்த பேச்சுக்கு பின், அடுத்தகட்ட நடவடிக்கையை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us