ADDED : ஜூலை 15, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22ல் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம், ஆக., 16 மண்டல அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு புறக்கணித்து வருகிறது. இதை கண்டித்து நேற்று பஸ் ஸ்டாண்ட், பணிமனைகள் முன் பிரசார இயக்கம் நடந்தது. இதில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அரசு கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் உள்ள 22 மண்டல அலுவலகங்கள் முன் குடும்பத்துடன் தர்ணா நடத்தவும், ஆக.,16 மண்டல அலுவலகங்கள் முன் போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.