ADDED : பிப் 12, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தை வரும், 2030க்குள், ஒரு டிரில்லியன் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார மாநிலமாக உருவாக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு நிறுவனங்களுடன், தமிழக அரசு பேச்சு நடத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், துாத்துக்குடி, திருச்சி, வேலுார், பெரம்பலுார் மாவட்டங் களில், 7,375 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில், உலகளாவிய திறன் மையங்கள், தோல் அல்லாத காலணி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்கள் இடம் பெறுகின்றன.

