sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தபால் தலை கண்காட்சி விண்ணப்பிக்க அழைப்பு

/

தபால் தலை கண்காட்சி விண்ணப்பிக்க அழைப்பு

தபால் தலை கண்காட்சி விண்ணப்பிக்க அழைப்பு

தபால் தலை கண்காட்சி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : நவ 30, 2024 09:50 PM

Google News

ADDED : நவ 30, 2024 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சென்னையில் நடக்க உள்ள, மாநில அளவிலான தபால் தலை கண்காட்சியில், தங்கள் சேகரிப்புகளை காட்சிப்படுத்த விரும்புவோர், டிசம்பர், 9க்குள் விண்ணப்பிக்கலாம்' என, தபால் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தபால் வட்டம் சார்பில், சென்னை ெஷனாய் நகர் அம்மா அரங்கத்தில், ஜன., 29 முதல் பிப்ரவரி, 1 வரை, மாநில அளவிலான தபால் தலை கண்காட்சியான, 'தநாபெக்ஸ் - 2025' நடக்க உள்ளது. தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்க, இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. பிரபல தபால் தலை சேகரிப்பாளர்கள், பள்ளி மாணவ - மாணவியரின் தபால் தலை சேகரிப்புகள், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிப்போர், இக்கண்காட்சியில் பங்கேற்கலாம். தங்கள் தபால் தலை சேகரிப்புகளை, காட்சிப்படுத்த விரும்புவோர், டிசம்பர், 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம், தமிழகத்தில் உள்ள, அனைத்து தபால் தலை சேகரிப்பு அலுவலகங்களிலும் கிடைக்கும்.

மேலும், https://tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தபால் துறை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us