sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தரிசு நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி 178 ஏக்கருக்கு வழங்கிய பட்டா ரத்து

/

தரிசு நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி 178 ஏக்கருக்கு வழங்கிய பட்டா ரத்து

தரிசு நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி 178 ஏக்கருக்கு வழங்கிய பட்டா ரத்து

தரிசு நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி 178 ஏக்கருக்கு வழங்கிய பட்டா ரத்து


ADDED : நவ 09, 2024 10:32 PM

Google News

ADDED : நவ 09, 2024 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடலுார் மாவட்டத்தில், தரிசு நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி, 178 ஏக்கர் நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நில நிர்வாக ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம் பண்ருட்டி தாலுகா, சிலம்பநத்தன்பேட்டை கிராம பஞ்சாயத்து தலைவர் தெய்வானை சிங்காரவேலு தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தில் தரிசு நிலமாக வகைப்படுத்தப்பட்ட நிலங்களை, புஞ்சையாக மாற்றி உள்ளனர். இதற்கு, அரசின் ஒப்புதல் பெறவில்லை.

எந்த அடிப்படையும் இன்றி, 185 ஏக்கர் நிலத்தை, நான்கு பேருக்கு ஒதுக்கி உள்ளனர். அரசின் அனுமதியின்றி தனி நபர்களின் பெயருக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு, 185 ஏக்கர் நிலத்துக்கு எப்படி பட்டா வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.

எனவே, இதுகுறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

அரசின் ஒப்புதல் இல்லாமல், தரிசு நிலத்தை புஞ்சை நிலமாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வனப்பகுதி, நீர்நிலை, தரிசு நிலங்களை, நில நிர்வாக ஆணையரின் அனுமதியின்றி, பட்டா நிலமாக மாற்றி, தற்போதைய எம்.பி., மற்றும் சினிமா இயக்குனரின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதில், சட்டவிரோதமாக நீச்சல் குளம், முந்திரி ஆலைகள் அமைக்கப்பட்டு உள்ளன' என்றார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'அரசு நிலங்களை, சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களுக்கு ஒதுக்கி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எனவே, இந்த விவகாரம் குறித்து, மூன்று மாதங்களில் விரிவான விசாரணை நடத்த, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'கிரைய ஆவணங்கள் அடிப்படையில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனால், 178.82 ஏக்கர் புஞ்சை நிலத்துக்கான உட்பிரிவு மற்றும் பட்டாவை ரத்து செய்து, தரிசு என வருவாய் ஆவணங்களில் பதிவு செய்ய, கடலுார் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.






      Dinamalar
      Follow us