உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 01, 2026 12:01 AM
அ நிறம் | அளவு
சென்னை: தனியார் மருத்துவமனைக்கு, புற்றுநோய் சிகிச்சை உபகரணங்கள் இறக்குமதி செய்த போது, கப்பல் துறை கட்டணம் செலுத்துவதில், முறைகேடு செய்ததாக, சுங்க வரித் துறை அதிகாரி ரோகிதஷ் செராவத், என்.எஸ்.கே., நிறுவன மேலாளர் என்.லட்சுமணன் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'குற்றம் சாட்டப்பட்டவர்கள், போலியாக ஆவணங்களை தயாரித்து உள்ளதற்கு, உரிய ஆதாரம் இல்லை.
'அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு என்பது, சட்ட நடைமுறை அதிகார துஷ்பிரயோகம் என்பதால், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, நீதி மன்றம் உத்தரவிட்டது.
