sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சருக்கு எதிரான வழக்கு ரத்து 'மாஜி' மீதான வழக்கை தொடர உத்தரவு

/

அமைச்சருக்கு எதிரான வழக்கு ரத்து 'மாஜி' மீதான வழக்கை தொடர உத்தரவு

அமைச்சருக்கு எதிரான வழக்கு ரத்து 'மாஜி' மீதான வழக்கை தொடர உத்தரவு

அமைச்சருக்கு எதிரான வழக்கு ரத்து 'மாஜி' மீதான வழக்கை தொடர உத்தரவு


ADDED : நவ 23, 2024 12:22 AM

Google News

ADDED : நவ 23, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேநேரத்தில், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது.

கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் தொகுதியில், பட்டமங்கலம் என்ற இடத்தில், தி.மு.க.,வினருக்கும், அ.தி.முக.,வினருக்கும் மோதல் நடந்தது.

இடைக்கால தடை


சம்பவம் தொடர்பாக, பெரியகருப்பன் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக, திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிவகங்கை நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. வழக்கு ரத்து கோரிய மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி, ''சம்பவத்தின் போது, பெரியகருப்பன் அந்த இடத்தில் இல்லை. வேறு இடத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். சம்பவத்துக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை,'' என்றார்.

இதையடுத்து, அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

சுரேஷ்ராஜன் வழக்கு


கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு சொந்தமான, 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தன் உதவியாளர் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டல் விடுத்ததாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்கியசிங் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், சுரேஷ்ராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக மிரட்டல், மோசடி பிரிவுகளின் கீழ், வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நாகர்கோவில் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் சுரேஷ்ராஜன் மனு தாக்கல் செய்தார்.

மனு, நீதிபதி வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்; மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us