sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உருட்டு கட்டைகளுடன் ஆட்கள் 150 பேர் மீது வழக்கு

/

உருட்டு கட்டைகளுடன் ஆட்கள் 150 பேர் மீது வழக்கு

உருட்டு கட்டைகளுடன் ஆட்கள் 150 பேர் மீது வழக்கு

உருட்டு கட்டைகளுடன் ஆட்கள் 150 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 24, 2025 08:18 PM

Google News

ADDED : ஜன 24, 2025 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன் வீட்டு முன், அனுமதியின்றி உருட்டு கட்டைகளுடன் ஆட்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட, 150 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈ.வெ.ரா., குறித்து சில கருத்துக்களை வெளியிட்டதற்காக, சீமானுக்கு த.பெ.தி.க., உள்ளிட்ட அமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்கள், இரு தினங்களுக்கு முன், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரது உருவ பொம்மையை கொளுத்தினர்.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினரும், சீமான் வீட்டு முன் உருட்டு கட்டைகளுடன் நின்றனர். அவர்களை கலவரத்தை துாண்டும் வகையில், சீமான் நிறுத்தியதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக, த.பெ.தி.க.,வினர் உட்பட, 878 பேர் மீது, நீலாங்கரை போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், அனுமதியின்றி தன் வீட்டு முன் உருட்டுக் கட்டைகளுடன் ஆட்களை திரட்டியதற்காக, சீமான் உட்பட அவரது கட்சியினர், 150 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us