sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டுதல் உருவாக்க கோரி வழக்கு

/

ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டுதல் உருவாக்க கோரி வழக்கு

ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டுதல் உருவாக்க கோரி வழக்கு

ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டுதல் உருவாக்க கோரி வழக்கு


ADDED : டிச 03, 2024 12:29 AM

Google News

ADDED : டிச 03, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, ஜல்லிக்கட்டிற்கு நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க தாக்கலான வழக்கில், மனுதாரர் அனுப்பிய மனுவை, தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:

தைப்பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் ஜனவரியில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. ஒரு சிலரின் ஒன்றுக்கு மேற்பட்ட காளைகள், 2024ல் மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதனால், பிற காளைகளின் உரிமையாளர்களுக்கு வாய்ப்பு பறிபோனது.

மாடு பிடி வீரர்களை அனுமதிப்பது மற்றும் பரிசு வழங்குவதில் முரண்பாடும், பாகுபாடும் நிலவுகிறது. தனி நபராக வரும் வீரர்களை பங்கேற்கவிடாமல் தடுக்கின்றனர். சிலர் மட்டுமே அதிக காளைகளை அடக்கியதாக முதல் பரிசு பெறுகின்றனர்.

திறமையான பிற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டிற்கு நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க வலியுறுத்தி, தமிழக வருவாய் துறை, கால்நடை துறை முதன்மை செயலர்கள், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பில், 'ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யப்பட்டு டோக்கன் வழங்கி, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டது. பின், நீதிபதிகள், 'இந்த மனுவை அதிகாரிகள் மூன்று வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us