ADDED : ஜன 28, 2025 05:55 AM

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க, 206.63 கோடி ரூபாயை குறுகிய கால கடனாக, போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்றவை, இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றன.
தமிழகம் முழுதும், 8,500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் ஓய்வு கால பலன்களை பெறாமல் உள்ளனர். 2023 ஏப்ரல் மாதத்தில் ஓய்வு, விருப்ப ஓய்வு, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க, 206.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை பரிசீலித்த அரசு, ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்களை வழங்கும் வகையில், 206.63 கோடி ரூபாயை, குறுகிய கால கடன் என்ற அடிப்படையில் ஒதுக்கியுள்ளது.
இந்தத் தொகையை, சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள், உரியவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.