sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சொத்து வாங்கி குவித்த மத்திய அரசு அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

/

சொத்து வாங்கி குவித்த மத்திய அரசு அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

சொத்து வாங்கி குவித்த மத்திய அரசு அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

சொத்து வாங்கி குவித்த மத்திய அரசு அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு


ADDED : மார் 29, 2025 08:28 PM

Google News

ADDED : மார் 29, 2025 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, மத்திய அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், 2021 முதல், புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், மத்திய பெட்ரோலிய துறையின் கீழ் செயல்படும், இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவனத்தில், முதன்மை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி விமலா. திருவாரூர் மாவட்டத்தில், வட்டார கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

விசாரணையில், ரவிச்சந்திரன் மற்றும் விமலா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக, 1.12 கோடி ரூபாய்க்கு, அதாவது, 78.17 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக இருவர் மீதும், சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us