sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு

தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு

தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு

16


UPDATED : ஜூலை 01, 2025 10:28 PM

ADDED : ஜூலை 01, 2025 10:24 PM

Google News

16

UPDATED : ஜூலை 01, 2025 10:28 PM ADDED : ஜூலை 01, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உள்ளது.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உள்ளது.

அதை வரவேற்கும் நேரத்தில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிக்காக காத்திருந்த போது, தி.மு.க., நிர்வாகியான ஞானசேகரனுடன் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதில் இதே அவசரமும் அர்ப்பணிப்பும் ஏன் காட்டப்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் வழக்கு விசாரணையை கடந்த ஆண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் மாற்றியதை எதிர்த்து இதே தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.தற்போது என்ன மாறிவிட்டது. தேர்தல் நெருங்குவதால், பாரபட்சமற்ற விசாரணை என்ற எண்ணம் தி.மு.க..,வுக்கு தோன்றுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us