sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாராய பலிகள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வலுக்கிறது! : சபையில் அமளி, வெளியே ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

/

சாராய பலிகள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வலுக்கிறது! : சபையில் அமளி, வெளியே ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

சாராய பலிகள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வலுக்கிறது! : சபையில் அமளி, வெளியே ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

சாராய பலிகள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வலுக்கிறது! : சபையில் அமளி, வெளியே ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

22


UPDATED : ஜூன் 23, 2024 01:45 PM

ADDED : ஜூன் 22, 2024 11:48 PM

Google News

UPDATED : ஜூன் 23, 2024 01:45 PM ADDED : ஜூன் 22, 2024 11:48 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கள்ளக்குறிச்சி சாராய பலிகள் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இவ்விவகாரத்தில் சட்டசபையில் அமளியும், வெளியே கட்சிகளின் ஆர்ப்பாட்டமும் தொடர்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்த 160க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 31; புதுச்சேரி ஜிப்மரில் மூன்று; சேலம் அரசு மருத்துவமனையில் 17; விழுப்புரம் மருத்துவமனையில் நான்கு பேர் என, 55 பேர் இறந்துள்ளனர்; 21 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

நடவடிக்கை


இச்சம்பவம் தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மையப் பகுதியில் போலீஸ் நிலையம், போலீஸ் எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள், போலீசார் உதவியின்றி இவ்வாறு நடக்க சாத்தியமில்லை என்று பலரும் கூறுகின்றனர்.

சம்பவம் நடந்ததும், கலெக்டர் மாற்றம், எஸ்.பி., உட்பட போலீசார் தற்காலிக பணிநீக்கம், வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் என, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், இறப்பு அதிகம் என்பதாலும், வெளி மாநிலத்தவர் தொடர்பு இருப்பதாலும், இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., விசாரித்தால் தான் அனைத்து உண்மைகளையும் கண்டறிய முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

'இவ்வழக்கை தமிழக அரசு விசாரித்தால், உண்மைகள் வெளி வராது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். அவரது கட்சியினர் தமிழக அரசை கண்டித்து, நேற்று மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; பலர் கைது செய்யப்பட்டனர்.

அரசு தயக்கம்


அ.தி.மு.க., பொதுச்செயலரும் இதே கோரிக்கையை இரண்டு நாட்களாக வலியுறுத்தி வருகிறார். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சபையிலும் வெளியிலும் இதை கோஷமாக எழுப்பி வருகிறார். வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க அரசு தயக்கம் காட்டக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சாராய விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக நேற்றும் அமளியில் ஈடுபட்டனர்; வெளிநடப்பும் செய்தனர். சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

பா.ம.க., தலைவர் அன்பு மணியும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி உள்ளார். கடிதம் வாயிலாக அண்ணாமலை தெரிவித்த தகவல்களையும், உளவுத்துறை தொகுத்து அனுப்பிய ஆவணங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாங்கள் தெரிவித்தன.

'இதுதான் ஒரே வழி'

தினமும் மக்கள் இறக்கின்றனர். எத்தனை பேர் மது அருந்தினர்; சிகிச்சைபெறுவோர் நிலை என்ன என்ற விபரங்களை, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, சட்டசபையில் பேச அனுமதி கேட்டோம்; தரவில்லை. சாராய விற்பனை, காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்காது. தி.மு.க., கவுன்சிலர் இருவருக்கு தொடர்பு உள்ளது. தி.மு.க., மாவட்ட செயலர், முக்கிய பங்கு வகிக்கிறார். அவர்களை விசாரிக்க வேண்டும். காவல் துறை மீதே புகார் இருப்பதால், அவர்கள் விசாரித்தால் நீதி கிடைக்காது. எனவே, சி.பி.ஐ., விசாரணை கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளோம். அது தான் ஒரே வழி. முதல்வருக்கு தைரியம் இருந்தால், நாங்கள் பிரச்னையை எழுப்பிய போது, பதில் அளித்திருக்க வேண்டும். அவர் இன்னும் ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை?

பழனிசாமி

அ.தி.மு.க., பொதுச்செயலர்








      Dinamalar
      Follow us