தமிழகத்தில் சாலை மேம்படுத்த ரூ.87 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
தமிழகத்தில் சாலை மேம்படுத்த ரூ.87 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
ADDED : ஜன 03, 2025 12:40 PM

சென்னை: தமிழகத்தில் சாலை மேம்படுத்த ரூ.87 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை- முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த 6.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154 அகலப்படுத்த 18.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்துார் - பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த 20.52 கோடி ரூபாயும், திண்டுக்கல் மாவட்டத்தில் தருமத்துப்பட்டி -ஆடலுார் - தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த 5.8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டங்கள் மூலம் உள்ளூரில் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்; சமூக, பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார்.