100 நாள் வேலை திட்டத்தை அழிக்க முயலும் மத்திய அரசு
100 நாள் வேலை திட்டத்தை அழிக்க முயலும் மத்திய அரசு
ADDED : டிச 16, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, சிதைத்து சின்னாபின்னமாக்கும் மத்திய அரசு, காந்தியின் மீதுள்ள வன்மத்தால், அவர் பெயரை துாக்கி விட்டு, வாயில் நுழையாத வடமொழி பெயரை திணித்துள்ளது. மத்திய அரசின் 100 சதவீத நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்திற்கு, இனி 60 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குவராம்.
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்து சாதனை படைத்துள்ளதற்காகவே, நம் தமிழகம் தண்டிக்கப்பட உள்ளது.
வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான், இத்திட்டத்தின் பயன்கள் தமிழக மக்களுக்கு கிடைக்குமாம். பல கோடி பேரை, வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை, மத்திய அரசு ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது. மத்திய அரசின் இந்த முயற்சியை மக்கள் முறியடிப்பர்.
- ஸ்டாலின்
தமிழக முதல்வர், தி.மு.க.,

