ADDED : பிப் 06, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மத்திய தொழில் பாதுகாப்பு படையில், கான்ஸ்டபிள், ஒட்டுனர் உள்ளிட்ட பிரிவுகளில், 1,124 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 21 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உடல் தேர்வு, எழுத்து தேர்வு, விரிவான மருத்துவ பரிசோதனை அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க, மார்ச் 4ம் தேதி கடைசி நாள். விண்ணப்பத்திற்கான கட்டணங்களை, ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
கூடுதல் விபரங்களை, cisfrectt.cisf.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.