தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை கொட்டக்கூடும்: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை கொட்டக்கூடும்: வானிலை மையம் தகவல்
UPDATED : மே 12, 2024 01:42 PM
ADDED : மே 12, 2024 01:27 PM

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில்
ராமநாதபுரம் பாம்பன் 7 செ.மீ.,
சிவகங்கை, மானாமதுரை, ஈரோடு, தாளவாடி, கோவை பொதுப்பணித்துறை, மக்கினம்பட்டியில் தலா 6 செ.மீ.,
ராமநாதபுரம், பரமக்குடி, பொள்ளாச்சியில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், அடுத்த 5 நாட்களுக்கு ( மே., 12 - 16 வரை) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை
இன்று (மே 12)
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி
மே 13
தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
மே 14
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி
மே 15
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி
மே 16
நீலகிரி, கோவை,திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை
அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
அடுத்த24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29- 30 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.