ADDED : மார் 21, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் வரும் 27ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை நாகர்கோவிலுக்கு செல்லாமல், நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே ரயில் இரட்டை பாதை பணி நடந்து வருகிறது.
இதனால், இந்த தடத்தில் செல்ல வேண்டிய பயணியர், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அந்த வகையில், சென்னை எழும்பூர் - குருவாயூர் செல்லும் குருவாயூர் விரைவு ரயில், வரும் 27ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை, இரு மார்க்கத்திலும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு செல்லாது.
நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.

