ADDED : ஜன 03, 2025 06:00 AM

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - மதுரை தேஜஸ் உட்பட, 15 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், இந்த தடத்தில் செல்லும், சில ரயில்களின் சேவையில், தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. அதன் விபரம்:
செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், வரும் 4, 7, 9, 11ம் தேதிகளில், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லாது
நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி விரைவு ரயில், 9ம் தேதி விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்
குருவாயூர் - எழும்பூர் விரைவு ரயில், 3, 6, 8, 10ம் தேதிகளில் புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும்
நாகர்கோவில் - கோவை விரைவு ரயில், 4, 7, 9, 11ம் தேதிகளில், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்வதால், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது
இதேபோல், கன்னியாகுமரி - ஹவுரா, நாகர்கோவில் - காச்சிக்குடா, மயிலாடுதுறை - செங்கோட்டை, பனாரஸ் - கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பகுதி ரத்து
எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், 7, 11ம் தேதிகளில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்
ஓக்ஹா - மதுரை இரவு 10:00 சிறப்பு ரயில், வரும் 6ம் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும்
ஈரோடு - செங்கோட்டை மதியம் 2:00 மணி விரைவு ரயில், இன்றும், 6ம் தேதியும் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்
மதுரை - எழும்பூர் மாலை 3:00 மணி தேஜஸ் ரயில், வரும் 7ம் தேதி திருச்சியில் இருந்து இயக்கப்படும்
செங்கோட்டை - ஈரோடு அதிகாலை 5:00 மணி ரயில் வரும் 7ம் தேதி கரூரில் இருந்து இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.