sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கர் கைது

/

விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கர் கைது

விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கர் கைது

விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கர் கைது


ADDED : டிச 18, 2024 12:43 AM

Google News

ADDED : டிச 18, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் சவுக்கு சங்கர், 48, தங்கியிருந்தபோது, அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் இருந்து, 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், சவுக்கு சங்கர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர் வாயிலாக மனு அளித்தார்.

மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி செங்மலச் செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும், 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை தேனாம்பேட்டை போலீசார் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில், சவுக்கு சங்கரை கைது செய்தனர். தேனி மாவட்ட போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என, சென்னை போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us