sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சவுக்கு சங்கருக்கு ஜாமின் அனுமதி

/

சவுக்கு சங்கருக்கு ஜாமின் அனுமதி

சவுக்கு சங்கருக்கு ஜாமின் அனுமதி

சவுக்கு சங்கருக்கு ஜாமின் அனுமதி


ADDED : டிச 24, 2024 10:24 PM

Google News

ADDED : டிச 24, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சென்னையை சேர்ந்தவர் யூ டியூபர் சவுக்கு சங்கர். தேனி பூதிப்புரத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, காரில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

கைதான அவருக்கு, மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு முதன்மை சிறப்பு நீதிமன்றம், ஏற்கனவே ஜாமின் அனுமதித்தது. அங்கு அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக அந்நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

அவரை போலீசார் கைது செய்து, சில தினங்களுக்கு முன் அந்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்; ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி செங்கமல செல்வன் பிறப்பித்த உத்தரவு:

ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. சென்னை வேப்பேரி சைபர் கிரைம் போலீசில், 15 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின், மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை இரண்டாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் தவறாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us