sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தரை பாலத்தை மூழ்கடித்த ரசாயன நுரை; வாகன போக்குவரத்து முடக்கம்

/

தரை பாலத்தை மூழ்கடித்த ரசாயன நுரை; வாகன போக்குவரத்து முடக்கம்

தரை பாலத்தை மூழ்கடித்த ரசாயன நுரை; வாகன போக்குவரத்து முடக்கம்

தரை பாலத்தை மூழ்கடித்த ரசாயன நுரை; வாகன போக்குவரத்து முடக்கம்

2


ADDED : அக் 24, 2024 09:49 AM

Google News

ADDED : அக் 24, 2024 09:49 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே செலவரப்பள்ளி அணை உள்ளது. அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 120 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி இருந்தது. அதேபோல் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 2,623 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 42.64 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.

அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 2,220 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்கிருந்து நீர்வரத்து கெலவரப்பள்ளி அணைக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. கர்நாடக மாநில தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் அதிக அளவில் அணைக்கு வந்ததால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீரால், அணை எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரை பாலத்தை ரசாயன நுரை சூழ்ந்துள்ளது.

அதனால் அவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள் மற்றும் வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு கிராமங்களுக்கு செல்கின்றனர். ஓசூர் தீயணைப்பு துறையினர் நுரைகளை அகற்ற விரைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருவி தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

ஆபத்தை உணராமல் தரைப்பாலம் பகுதியில், தேங்கியுள்ள ரசாயன நுரையுடன் இளைஞர்கள் விளையாடுவதும் செல்பி எடுப்பதுமாக உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்யும் போதெல்லாம் அம்மாநில தொழிற்சாலை கழிவுகள் கெலவரப்பள்ளி அணைக்கு வந்து அங்கிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரில் ரசாயன நுரை ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி கர்நாடகா மற்றும் தமிழக அதிகாரிகள் கூட்டு குழுவினர் மத்திய அரசு அதிகாரியுடன் சென்று ஆய்வு செய்த போதும் ஆற்றில் ரசாயன நுரை கலப்பதை கர்நாடக அரசு இதுவரை தடுத்து நிறுத்தவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us