sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யார் அந்த சார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்; எல்லாம் ஞானசேகரன் செயல்!

/

யார் அந்த சார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்; எல்லாம் ஞானசேகரன் செயல்!

யார் அந்த சார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்; எல்லாம் ஞானசேகரன் செயல்!

யார் அந்த சார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்; எல்லாம் ஞானசேகரன் செயல்!


ADDED : பிப் 24, 2025 08:33 PM

Google News

ADDED : பிப் 24, 2025 08:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் மீது சிறப்பு புலனாய்வுக்குழுவினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்துக்கும், 'சார்' என்று அழைத்து ஞானசேகரன் போனில் பேசிய ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. கைது நடவடிக்கையை தொடர்ந்து யார் அந்த சார் என்ற விவகாரமும் பெரிதானது.

வழக்கில் சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதல்படி, 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந் நிலையில், ஞானசேகரன் மீது சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக அவர்கள் தாக்கல் செய்து இருக்கின்றனர்.

அதில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் என அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று உள்ளதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us