sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை : பிரியாணி கடை வியாபாரி கைது

/

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை : பிரியாணி கடை வியாபாரி கைது

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை : பிரியாணி கடை வியாபாரி கைது

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை : பிரியாணி கடை வியாபாரி கைது

3


UPDATED : டிச 25, 2024 05:37 PM

ADDED : டிச 25, 2024 12:59 PM

Google News

UPDATED : டிச 25, 2024 05:37 PM ADDED : டிச 25, 2024 12:59 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கல்லூரி வளாகத்திலேயே பாலியல் தொல்லை நடந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு; நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பெயர் பெற்றது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம். இங்கு பயிலும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் நேற்று முன்தினம் (டிச.,23) இரவு காதலர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்துள்ளதாக தெரிகிறது. மாணவரை தாக்கிவிட்டு, மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று பணியில் இருந்த இரவுநேர காவலாளியிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், நடமாடும் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து பல தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். தனியாக இருந்த காதலர்களை வீடியோ எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவரது மொபைல்போனில் பல வீடியோக்கள் உள்ளன. 2011 ல் இதேபோன்று அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.






      Dinamalar
      Follow us