sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழை காரணமாக 4 விரைவு ரயில்கள் ரத்து

/

மழை காரணமாக 4 விரைவு ரயில்கள் ரத்து

மழை காரணமாக 4 விரைவு ரயில்கள் ரத்து

மழை காரணமாக 4 விரைவு ரயில்கள் ரத்து

3


UPDATED : அக் 15, 2024 08:02 PM

ADDED : அக் 15, 2024 06:02 PM

Google News

UPDATED : அக் 15, 2024 08:02 PM ADDED : அக் 15, 2024 06:02 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பேசின் பாலம் - வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

*திருப்பதியில் இருந்து இன்று மாலை 6:05 க்கு சென்னை வர வேண்டிய சப்தகிரி விரைவு ரயில்

*சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11 மணிக்கு ஈரோடு கிளம்பும் ஏற்காடு விரைவு ரயில்

*சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9:15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு விரைவு ரயில்

*சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4:35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி விரைவு ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து


சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவுரை


இதனிடையே தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,

* தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறைவான வேகத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும்; இதனால் ரயில்கள் தாமதம் ஆகலாம்

* ⁠வானிலை நிலவரத்தை பொறுத்து, ரயில்கள் பகுதி நேரமாக அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படலாம்

* ⁠பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளது.

ரயில் புறப்படும் இடம் மாற்றம்


பேசின் பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால், சில ரயில்கள் கிளம்பும் இடம்மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

*சேலம் வழியாக பாலக்காடு வரை இயக்கப்படும் ரயில் ஆவடியில் இருந்து கிளம்பும்

*திருவனந்தபுரம், மேட்டுப்பாளையம் கோவை செல்லும் ரயில்கள் ஆவடியில் இருந்து கிளம்பும்

*சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வரை செல்லும்ரயில் பெரம்பூரில்இருந்து கிளம்பும்

*ஜோலார்ப்பேட்டை ஆழப்புலா விரைவு ரயில் சென்னை கடற்கரை வழியாக இயக்கப்படும்.






      Dinamalar
      Follow us