ADDED : அக் 19, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மத்திய அரசு பணியாளர்களுக்கு, ஜூலை 1 முதல் 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 53 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், ஜூலை 1 முதல் அகவிலைப்படியை, 50 சதவீதத்தில் இருந்து, 53 சதவீதமாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர்.
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 1,931 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.