எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி முதல்வர் பெருமிதம்
எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி முதல்வர் பெருமிதம்
ADDED : ஜூன் 15, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:எழுத்தறிவு பெறும் திட்டத்தில், 100 சதவீத தேர்ச்சி அடைந்து, தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முற்றிலும் எழுதப், படிக்கத் தெரியாத, 15 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில், தமிழகத்தில் இருந்து பயின்ற, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீத தேர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக பணியாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.