sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கோவையில் செம்மொழி பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

/

 கோவையில் செம்மொழி பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

 கோவையில் செம்மொழி பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

 கோவையில் செம்மொழி பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்


ADDED : நவ 26, 2025 12:29 AM

Google News

ADDED : நவ 26, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில், 208.50 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

முன்னதாக, ஆயுதப்படை போலீசாரின் அலங்கார அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். பின், கடையேழு வள்ளல்கள் சிலைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, படிப்பகம், திறந்தவெளி அரங்கம் போன்றவற்றை பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.

பூங்காவின் சிறப்பம்சமாக செம்மொழி வனம், மூலிகை வனம், பாறைத்தோட்டம், ஐந்திணை வனம், மகரந்த தோட்டம் என, 23 வகையான தோட்டங்கள், 38.69 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓராட்டுக்குப்பை கிராமத்தில், அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் ஜி.டி.நாயுடு அறக்கட்டளை பங்களிப்புடன், 5.67 கோடி ரூபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைத்து கட்டப்பட்டுள்ளன.

இந்த 86 புதிய வீடுகளுக்கான சாவிகளை, பயனாளி களுக்கு வழங்கிய முதல்வர், கோவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.

நாட்டுப்புற கிராமிய கலைநிகழ்ச்சியை பார்த்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சாமிநாதன், ராஜா, கயல்விழி, எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நினைவு பரிசாக

காங்கயம் காளை

பூங்கா வளாகத்தில் தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்று முதல்வர் நலம் விசாரித்தார். அவருக்கு கட்சியினர் சிலர் புத்தகங்கள் வழங்கினர். தமிழக நகராட்சி களின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு, முதல்வருக்கு காங்கயம் காளை மாடு சிலையை நினைவு பரிசாக வழங்கினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாட்டு வண்டி சிலையை பரிசாக வழங்கினார். துறையின் முதன்மை செயலர் கார்த்திகேயன், வள்ளுவர் கோட்டம் சிலையை பரிசளித்தார்.






      Dinamalar
      Follow us