அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு
அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு
ADDED : அக் 24, 2025 10:36 AM

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதை அடுத்து, அடையாறு முகத்துவாரப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவர் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பருவமழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
* பள்ளிப்பட்டு 150 * நாலு முக்கு 118
* ஊத்து 105
* அரக்கோணம் 98
* மேடவாக்கம் 93
* பாலாமோர் 87
* கக்கச்சி 80
* திருவாலங்காடு 75
* பேச்சிப்பாறை 72
* பெருஞ்சாணி 69
* திருத்தணி 65
* மின்னல் 61
* திருச்சி 59
* திற்பரப்பு 58
* திருவள்ளூர் 56
* மாஞ்சோலை 52
* பனப்பாக்கம் 51
* பள்ளிக்கரணை 50
* கொட்டாரம் 49
* கண்ணகி நகர் 47
இந்நிலையில், அடையாறு முகத்துவாரப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

