sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மக்களுடன் முதல்வர்' திட்டம் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

/

'மக்களுடன் முதல்வர்' திட்டம் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

'மக்களுடன் முதல்வர்' திட்டம் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

'மக்களுடன் முதல்வர்' திட்டம் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு


ADDED : ஜன 21, 2025 03:57 AM

Google News

ADDED : ஜன 21, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், மக்களிடம் இருந்து பெறப்பட்ட, 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

அரசின் சேவைகளைப் பெற, அரசு அலுவலகங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்கும், தொலைநோக்கு திட்டமான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, 2023 டிச., 18ல், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தில், 15 அரசு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல் என, 44 அடிப்படை பொது சேவைகள் வழங்கப்படுகின்றன.

பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று, 30 நாட்களுக்குள் அரசின் முக்கிய சேவைகளை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதற் கட்டமாக நகர்ப்புறங்களில், 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது.

நகர்ப்புற மக்கள் இடையே, இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஊரகப் பகுதிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இதுவரை, 2,344 முகாம்கள், ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் மக்களிடமிருந்து பெறப்பட்ட, 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திட்டம் துவக்கப்பட்ட ஒரே ஆண்டில், மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. அரசு, மக்களிடம் இறங்கி வந்து சேவையாற்றும் என்பதற்கு, 'மக்களுடன் முதல்வர்' திட்டம் மிகச்சிறந்த சான்று.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us