ADDED : அக் 10, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர், காரைக்காலைச் சேர்ந்த 17 பேர் என, 47 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களையும் சேர்த்து, 74 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.